Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குடும்பத்தகராறில் கணவன் கொலை மனைவி,மகள்கள், மருமகன் கைது

குடும்பத்தகராறில் கணவன் கொலை மனைவி,மகள்கள், மருமகன் கைது

குடும்பத்தகராறில் கணவன் கொலை மனைவி,மகள்கள், மருமகன் கைது

குடும்பத்தகராறில் கணவன் கொலை மனைவி,மகள்கள், மருமகன் கைது

ADDED : ஜூலை 31, 2024 02:33 AM


Google News
மானாமதுரை,:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நவத்தாவு கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவியையும் உடந்தையாக இருந்த 2 மகள்கள், மருமகனையும் போலீசார் கைது செய்தனர்.

நவத்தாவு கிராமத்தைச் சேர்ந்த அழகர் மகன் கருப்புசாமி 50. இவரது மனைவி பஞ்சவர்ணம் 42. இவர்களுக்கு கலைராணி 23, கண்மணி 21 என்ற இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கருப்புசாமி மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டதால் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் , குடும்பத் தகராறு நடந்தது.

இதையடுத்து கருப்புசாமி மனைவி மற்றும் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மகள் கலைராணி திருமணத்திற்காக மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இப்பிரச்னையில் மீண்டும் கணவன்,மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பஞ்சவர்ணம், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் பின்பகுதியில் கணவன் கருப்புசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதையடுத்து பஞ்சவர்ணம், இக்கொலைக்கு உடந்தையாக இருந்த மகள் கலைராணி , அவரது கணவர் செல்வா 24 மற்றும் மற்றொரு மகள் கண்மணி ஆகியோரை மானாமதுரை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us