Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆடி செவ்வாயை முன்னிட்டு பால்குடம் எடுத்த நகரத்தார்

ஆடி செவ்வாயை முன்னிட்டு பால்குடம் எடுத்த நகரத்தார்

ஆடி செவ்வாயை முன்னிட்டு பால்குடம் எடுத்த நகரத்தார்

ஆடி செவ்வாயை முன்னிட்டு பால்குடம் எடுத்த நகரத்தார்

ADDED : ஜூலை 24, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு நகரத்தார் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி கொண்டாடப்படுகிறது. ஆடி முதல் செவ்வாயான நேற்று நகரத்தார்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், காவடி துாக்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நகரச் சிவன் கோயிலில் தொடங்கி, ஊர்வலமாக வந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் செலுத்தினர்.

தொடர்ந்து, ஜூலை 26 திருவிளக்கு பூஜையும், ஜூலை 30 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், ஆக.2 1008 சங்காபிஷேகமும், ஆக.7ம் வளையல் அலங்காரமும், ஆக.16ம் கோமாதா பூஜையும் நடைபெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us