ADDED : ஜூலை 18, 2024 11:42 PM
சிவகங்கை:
சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒப்படைப்பு, உலக மரபு நாள் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி வரவேற்றார். தொல்நடை குழு தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். நிறுவனர் காளிராஜா முன்னிலை வகித்தார். சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியன் பங்கேற்றனர். மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், வேல்முருகன் பங்கேற்றனர். தொல்நடைக்குழு பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார். தொல்நடைக்குழு செயலர் நரசிம்மன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.