/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடி அருங்காட்சியகத்தில் முதல் உதவி சிகிச்சை மையம்; சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல் கீழடி அருங்காட்சியகத்தில் முதல் உதவி சிகிச்சை மையம்; சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
கீழடி அருங்காட்சியகத்தில் முதல் உதவி சிகிச்சை மையம்; சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
கீழடி அருங்காட்சியகத்தில் முதல் உதவி சிகிச்சை மையம்; சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
கீழடி அருங்காட்சியகத்தில் முதல் உதவி சிகிச்சை மையம்; சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 10:01 PM
கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் அவசர காலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு சிசிக்சையளிக்க முதல் உதவி சிகிச்சை மையம் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு கடந்த 2023 மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டது. அருங்காட்சியகத்திற்கு தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் காரணமாகவும் சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாகவும் அருங்காட்சியகம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு வருகிறது. திடீரென உடல் நல குறைவு காரணமாக சோர்வடையும் பயணிகளுக்கு முதல் உதவி சிகிச்சை செய்ய எந்த வசதியும் இல்லை. கீழடி அருங்காட்சியகம் நான்கு வழிச்சாலையில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது.
அருங்காட்சியகத்திற்கு வருபவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் கொந்தகை ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மதுரை அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு அழைத்து செல்ல வேண்டும், அருங்காட்சியகத்தில் அதற்கான வாகன வசதியும் இல்லை. அருங்காட்சியகம் வரும் சுற்றுலா பயணிகள் உடல் நல குறைவு ஏற்பட்டால் அங்கேயே விழுந்து விடுகின்றனர். 20 முதல் 50 பேர் குழுவாக வரும் நிலையில் ஒருவருக்கு உடல்நல குறைவு என்றால் அனைவருமே பாதிக்கப்படுகின்றனர்.
அருங்காட்சியகத்தில் முதல் உதவி சிகிச்சை மையம் இருந்தால் ஓரளவிற்கு சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே தொல்லியல் துறை அருங்காட்சியத்தில் முதல் உதவி சிகிச்சை மையம் ஏற்டுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.