ADDED : ஜூலை 01, 2024 10:02 PM
சிவகங்கை:
சிவகங்கையில் தேசிய புள்ளியியல் தின விழா கடைபிடிக்கப்பட்டது.
விழாவிற்கு துணை இயக்குனர் ஏ.சுந்தர் ஆனந்த் தலைமை வகித்தார். 'முடிவு எடுத்தல்' என்ற தலைப்பில் நடந்த விழாவில், புள்ளியியல் உதவி இயக்குனர்கள் கருப்பசாமி, நாசர்கான், புள்ளியியல் அலுவலர்கள் சரவணக்குமார், கண்ணதாசன், நாகராஜன், புள்ளியியல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.