ADDED : ஜூலை 19, 2024 04:09 PM

காரைக்குடி : காரைக்குடி அம்மன் கோயில்களில், ஆடி முதல் வெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி தொடங்கியதையடுத்து நேற்று ஏராளமான பக்தர்கள் அம்மன் கோயில்களில் தரிசனம் செய்தனர். கோயில்களில் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன், கொப்புடையநாயகி அம்மன், கொல்லங்காளியம்மன், கணேசபுரம் மாரியம்மன் கண்டனுார், கோட்டையூர், சாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது.