
சிவகங்க : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் சார்பாக பதவி உயர்வு வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் மூவேந்தன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினர். மாவட்ட பொருளாளர் முத்து சிதம்பரம் நன்றி கூறினார்.