ADDED : ஜூன் 16, 2024 10:31 PM

பூவந்தி : பூவந்தி அருகே அரசனூர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் மலேசியா பாண்டியன் தலைமை வகித்தார்.
முதல்வர் சுப்ரமணியன் வரவேற்றார். நிர்வாக இயக்குனர்கள் சரவணன், வரதராஜன் முன்னிலை வகித்தனர். மதுரை காமராசர் பல்கலை கல்லுாரி வளர்ச்சி குழு தலைவர் கண்ணதாசன் பட்டங்களை வழங்கினார்.