Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் நகரில் ‛'சிசிடிவி' கேமராக்கள்

திருப்புவனம் நகரில் ‛'சிசிடிவி' கேமராக்கள்

திருப்புவனம் நகரில் ‛'சிசிடிவி' கேமராக்கள்

திருப்புவனம் நகரில் ‛'சிசிடிவி' கேமராக்கள்

ADDED : ஜூலை 22, 2024 05:01 AM


Google News
திருப்புவனம்: திருப்புவனம் நகரில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன.

திருப்புவனம் நகரில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, டூவீலர் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் எந்த வித தடயமும் கிடைக்காமல் போலீசார் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். கடைகளில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் பலவும் அவர்கள் நிறுவன பாதுகாப்பிற்கே அமைக்கப்பட்டுள்ளதால் போலீசாருக்கு தேவையான தகவல்கள் பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டன. இதனை தவிர்க்க திருப்புவனம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நகரில் முக்கிய இடங்களில் பத்து சி.சி.டி.வி., கேமராக்கள் ஒரு லட்ச ரூபாய் செலவில் பொறுத்தப்பட்டன. மேலும் சி.சி.டி.வி., கேமராக்களில் இருந்து காட்சிகளை போலீசார் கண்காணிக்க மெகா சைஸ் கலர் எல்.இ.டி., டி.வி.,யும் போலீஸ் அவுட் போஸ்ட்டில் பொறுத்தப்பட்டன. இவற்றை நேற்று முன்தினம் மாலை டி.எஸ்.பி., கண்ணன் திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வர்த்தக சங்க தலைவர் சாதிக்பாட்சா, பொருளாளர் ஞானம் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us