ADDED : ஜூலை 13, 2024 05:09 AM
பூவந்தி : பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் திறன் பயிற்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் விசுமதி தலைமை வகித்தார். மாணவி ஸ்னோபர் நிஷா வரவேற்றார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், போட்டி தேர்வுகளை சந்திப்பது குறித்து விளக்கம் அளித்தார். பொன்மதி சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் குறித்து பேசினார்.
மாணவி சந்திரருசிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி தொழில் நெறி வழிகாட்டி மையத்தினர் செய்திருந்தனர்.