ADDED : ஜூன் 21, 2024 04:22 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கீழவலையம்பட்டி மகாலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டுபிரிவில் 8 ஜோடி, சிறிய மாட்டு பிரிவில் 12 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.