ADDED : ஜூலை 25, 2024 11:51 PM

சிவகங்கை : காரைக்குடி அழகப்பா பல்கலையில், மாவட்ட செஞ்சிலுவை சங்கத்துடன்இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
அழகப்பா பல்கலை ெஹல்த் கேர் சென்டர் மருத்துவ அலுவலர் ஆர்.ஆனந்தி வரவேற்றார். முகாமை அழகப்பா பல்கலை துணைவேந்தர்ஜி.ரவி துவக்கி வைத்தார்.
பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் முன்னிலைவகித்தார். இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் வி.சுந்தரராமன், ஆலோசகர் பகீரதநாச்சியப்பன் பங்கேற்றனர்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பி.சீனிவாசன், என்.சி.சி., அலுவலர் சி.வைரவசுந்தரம்,ஒய்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி, துணை ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி பங்கேற்றனர். பல்கலை மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.