ADDED : ஆக 01, 2024 04:48 AM
திருப்புவனம்: புலிகளை காக்க வலியுறுத்தி புலி வேடமிட்டு பள்ளி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். மனித இனப்பெருக்கம் காரணமாக காடுகள் அழிக்கப்படுவதுடன் காட்டு விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது புலி இனம் தான். எனவே புலி இனங்களை காப்பாற்றுவதன் அவசியம் குறித்து திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் புலி வேடமிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். முதல்வர் ஜாஸ்மின்சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.