ADDED : ஜூலை 25, 2024 11:49 PM
சிவகங்கை: சிவகங்கை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் கரண் 19. சிவகங்கையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஜூலை 15ம் தேதி சிவகங்கை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்றார்.
அப்போது அந்த சிறுமியை ஆட்டோவில்வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் கரணை கைது செய்தனர்.