Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவக்கோட்டை அருகே காவலாளியை தாக்கி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

தேவக்கோட்டை அருகே காவலாளியை தாக்கி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

தேவக்கோட்டை அருகே காவலாளியை தாக்கி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

தேவக்கோட்டை அருகே காவலாளியை தாக்கி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

ADDED : ஜூலை 04, 2024 02:17 AM


Google News
Latest Tamil News
தேவக்கோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே பாவனக்கோட்டை மெயின் ரோட்டில், நாகாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.

பொன்னத்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன், 65, என்பவர் காவலாளியாக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ஒரு கும்பல், பூமிநாதனை அரிவாளால் தாக்கியது. இதில், அவர் மயங்கினார்.

வங்கி உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல், தனியார் நகைகள் வைத்திருந்த லாக்கரை டிரில்லர் வாயிலாக உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது; உடைக்க முடியவில்லை.

அப்போது தான், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கண்ட அந்த கும்பல், அதில் தங்கள் முகம் பதிவாகி இருந்ததை பார்த்து, கேமரா காட்சிகள் பதிவாகி இருந்த 'ஹார்டு டிஸ்க்'கை எடுத்து, வெளியே ஓடி தப்பியது; லாக்கரில் இருந்த நகைகள் தப்பின. அதிகாலை 2:00 மணிக்கு ரோந்து போலீசார் நோட்டில் கையெழுத்து வாங்க வந்தனர்.

வழக்கமாக, ஜன்னல் அருகில் வைக்கப்பட்டிருக்கும் நோட்டில் கையெழுத்திடும் போலீசார், வங்கி கதவு திறந்து இருப்பதையும், கேமரா உடைக்கப்பட்டு இருந்ததையும் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். காவலாளி பூமிநாதனை தேடிய போது, அவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிவகங்கை எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us