Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பம்

சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பம்

சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பம்

சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பம்

ADDED : ஜூன் 06, 2024 05:07 AM


Google News
சிவகங்கை : சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

ஆக., 15 சுதந்திர தினத்தன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின், சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருது வழங்க உள்ளார்.

இந்த விருது பெற தகுதியுள்ளவர்கள் தமிழகஅரசின் ''https://awards.tn.gov.in'' இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதில் இருந்து இரண்டு நகல்கள் எடுத்து, புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கைக்கு ஜூன் 20 அன்று மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இந்த விருது பெற தமிழ்நாட்டில் பிறந்த, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டு சமூக நல நடவடிக்கை, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us