/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பஸ்களில் ‛ஏர்ஹாரன்' பறிமுதல் ஆய்வாளர் நடவடிக்கை பஸ்களில் ‛ஏர்ஹாரன்' பறிமுதல் ஆய்வாளர் நடவடிக்கை
பஸ்களில் ‛ஏர்ஹாரன்' பறிமுதல் ஆய்வாளர் நடவடிக்கை
பஸ்களில் ‛ஏர்ஹாரன்' பறிமுதல் ஆய்வாளர் நடவடிக்கை
பஸ்களில் ‛ஏர்ஹாரன்' பறிமுதல் ஆய்வாளர் நடவடிக்கை
ADDED : ஜூலை 15, 2024 05:04 AM

தேவகோட்டை, : தேவகோட்டை நகரில் தனியார் பஸ்கள், சில லாரிகள் அதி வேகமாக இயக்கப்படுகிறது.
குறிப்பாக சில தனியார் பஸ்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு டிரைவர்கள் ஓட்டி செல்வதால், பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். தனியார் பஸ்களில் விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் 'ஏர்ஹாரன்களை' பயன்படுத்துவதால், இறைச்சல் அதிகரித்து காணப்படுகின்றன.
காரைக்குடி வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் (பொறுப்பு) சித்ரா தலைமையில் தனியார் பஸ்களில் ஆய்வு செய்து, ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தார்.