/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கூத்தாண்டத்திற்கு நிழற்குடை அவசியம் கூத்தாண்டத்திற்கு நிழற்குடை அவசியம்
கூத்தாண்டத்திற்கு நிழற்குடை அவசியம்
கூத்தாண்டத்திற்கு நிழற்குடை அவசியம்
கூத்தாண்டத்திற்கு நிழற்குடை அவசியம்
ADDED : ஜூன் 16, 2024 10:22 PM
சிவகங்கை : சிவகங்கை அருகே வல்லனேரி கூத்தாண்டன் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கையில் இருந்து இளையான்குடி ரோட்டில் உள்ள வல்லனேரி கூத்தாண்டனில், 300 குடும்பம் வரை வசிக்கின்றனர்.
சிவகங்கை மற்றும் இளையான்குடி செல்லும் பயணிகள் கூத்தாண்டன் விலக்கு ரோட்டில் நின்று பஸ்சில் செல்ல வேண்டும். ஆனால், அங்கு நிழற்குடை வசதியின்றி பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதைதவிர்க்க நிழற்குடை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.