ADDED : மார் 14, 2025 07:32 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி மருது ஐயனார் கோயில் காளை பல்வேறு மஞ்சுவிரட்டுகளில் ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இக்காளை இறந்தது. உடலுக்கு கிராமத்தினர் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காளையின் உடல் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மருதி ஊருணி அருகே அடக்கம் செய்யப்பட்டது.