Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாத்திரை சாப்பிட்ட தொழிலாளி பலி

மாத்திரை சாப்பிட்ட தொழிலாளி பலி

மாத்திரை சாப்பிட்ட தொழிலாளி பலி

மாத்திரை சாப்பிட்ட தொழிலாளி பலி

ADDED : ஜூன் 11, 2025 02:32 AM


Google News
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி, அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர், 38. தறித்தொழில் செய்து வந்தார். இவருக்கு, 3 ஆண்டாக உடல்நிலை சரியில்லாததால், சேலத்தில் சித்த வைத்தியம் பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடன் பிரச்னையும் இருந்தது. நேற்று முன்தினம் மாலை, தென்னை மரத்துக்கு வைத்திருந்த அமோனியம் பாஸ்பேட் மாத்திரையை விழுங்கினார். உறவினர்கள், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு ஓமலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்தது தெரியவந்தது. அவரது மனைவி மனோரஞ்சிதம் புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us