Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விபத்தில் சுயநினைவு இழந்த பெண் பலி

விபத்தில் சுயநினைவு இழந்த பெண் பலி

விபத்தில் சுயநினைவு இழந்த பெண் பலி

விபத்தில் சுயநினைவு இழந்த பெண் பலி

ADDED : ஜூன் 08, 2025 01:09 AM


Google News
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தகரபுதுாரை சேர்ந்த விவசாயி குமார், 45. இவரது மனைவி கலைச்செல்வி, 36. இவர்கள் நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, உறவினர் வீட்டுக்கு, கெங்கவல்லி நோக்கி, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர்.

ஹெல்மெட் அணியாமல் குமார் ஓட்டினார். விஜயபுரம் பாலத்தில் ஏறியபோது, தடுமாறி விழுந்ததில் கலைச்செல்வி தலையில் படுகாயம் ஏற்பட்டு, சுய நினைவு இழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us