/உள்ளூர் செய்திகள்/சேலம்/சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்தவிழா கோலாட்டத்துடன் நிறைவுசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்தவிழா கோலாட்டத்துடன் நிறைவு
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்தவிழா கோலாட்டத்துடன் நிறைவு
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்தவிழா கோலாட்டத்துடன் நிறைவு
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்தவிழா கோலாட்டத்துடன் நிறைவு
ADDED : ஜூன் 03, 2024 07:07 AM
சேலம் : சவுந்தரராஜ பெருமாள் கோவில் வசந்த உற்சவம், கோலாட்டத்துடன் நிறைவு பெற்றது.
அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியானதை தொடர்ந்து, பூமியை குளிர்விக்கும் வகையில் சிவாலயங்களில், தாரா பாத்திர அபி ேஷகம் செய்வது போல், விஷ்ணு ஆலயங்களில் வசந்த உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
சேலம், அம்மாபேட்டை சவுந்தரவல்லி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 14ம் ஆண்டாக ஐந்து நாட்கள் நடக்கும் வசந்த விழா கடந்த மே, 29ல் துவங்கியது. வசந்த உற்சவத்தையொட்டி, செயற்கையாக சிறிய தெப்பக்குளம் உருவாக்கி, சுற்றிலும் காய்கனிகளால் நந்தவனம் போல் அலங்கரித்து, அதன் நடுவில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் தாயாருடன் பெருமாளை எழுந்தருள செய்து சேர்த்தி சேவையில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.தினமும் மாலை, சவுந்தரவல்லி தாயாருடன் சவுந்தரராஜருக்கு சேர்த்தி திருமஞ்சனமும், பின் சிறப்பு அலங்காரமும் செய்து பட்டாச்சாரியார்களால் வேத பாராயணம், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தப்பட்டு வந்தது.நிறைவு நாளான நேற்று மாலை, சவுராஷ்டிரர்களின் பாரம்பரிய கலைகளான ஆண்கள் பங்கேற்கும் 'கோணங்கி' நடனம் மற்றும் பெண்களின் 'கோலாட்டம்' ஆகியவை ஸ்ரீ கிருஷ்ண பிருந்தாவன குழு சார்பில் கோலாகலமாக நடத்தி, பெருமாளை இசை நடனத்தால் குளிர்வித்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.