Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ லாரி பறிமுதலால் இரு தரப்பு மோதல் தி.மு.க., நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு

லாரி பறிமுதலால் இரு தரப்பு மோதல் தி.மு.க., நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு

லாரி பறிமுதலால் இரு தரப்பு மோதல் தி.மு.க., நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு

லாரி பறிமுதலால் இரு தரப்பு மோதல் தி.மு.க., நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு

ADDED : ஜூன் 06, 2025 02:33 AM


Google News
இடைப்பாடி :இடைப்பாடி, தாதாபுரத்தை சேர்ந்தவர் மாதையன், 68. சேலம் மேற்கு மாவட்ட விவசாய அணி இணை செயலர். இவரது மகன் மேகநாதன், போடிநாயக்கன்பட்டியில் இருந்து, டிப்பர் லாரி மூலம், நேற்று முன்தினம் செம்மண் எடுத்துச்சென்றார். அங்கு வந்த தாசில்தார் வைத்தியலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், லாரியை பிடித்து, பூலாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தாசில்தாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி, மாதையன், மேகநாதன் ஆகியோர், குஞ்சாம்பாளையம் சென்று, அங்கிருந்த சந்திரன் மனைவி சத்யாவிடம் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த கதிர்வேல் என்பவர், மாதையன், மேகநாதனிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டு, ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். இருதரப்பிலும் சிலர் காயம் அடைந்து, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கதிர்வேல் புகாரில், மாதையன், அவரது தம்பி ரவி, மேகநாதன் மீதும், மேகநாதன் புகார்படி, சந்திரன், கதிர்வேல் உள்பட, 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us