Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்: நாளை கும்பாபிேஷகம்

தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்: நாளை கும்பாபிேஷகம்

தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்: நாளை கும்பாபிேஷகம்

தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்: நாளை கும்பாபிேஷகம்

ADDED : ஜூலை 11, 2024 12:52 AM


Google News
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே ஊஞ்சக்காட்டில் உள்ள விநாயகர், கோண பெருமாள், துளசிராம பெருமாள், ஓபுளிராய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ராமானுஜர், ராகவேந்திர சுவாமிகள் உள்ளிட்ட பரி-வார தெய்வங்களுடன் உள்ள கோவில் புனரமைக்கப்பட்டு கும்-பாபிேஷக விழா நேற்று காலை கணபதி யாகத்துடன் தொடங்கி-யது.

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் புனி-தநீர் கலசங்களை தலையில் சுமந்தபடி, கோவிலுக்கு வந்து அபி ேஷகம் செய்தனர்.இன்று காலை, 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கும். இரவு, 7:00 மணிக்கு திருமுருக கிருபானந்த வாரி-யாரின் மாணவி தேச மங்கையர்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்கள், கோபுர கலசங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு கோ பூஜை செய்து மகா பூர்ணாஹூ-தியுடன் யாகசாலை நிறைவடையும். காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட அனைத்து பெருமாள்களுக்கு புனிதநீரால் அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்படும். பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us