Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது

காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது

காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது

காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது

ADDED : மே 15, 2025 01:26 AM


Google News
ஓமலுார்,காடையாம்பட்டி, அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை முதல், காற்று, இடி, மின்னல் ஏற்பட்டது. இரவு, 9:00 மணிக்கு, பூசாரிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியது.

இதில் மரம் கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் தானாக அணைந்துவிட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

ஏற்காட்டில் இரவு, 9:05 மணிக்கு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. 9:40 மணி வரை கொட்டி தீர்த்தது. அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் மித மழை, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

சங்ககிரியில் மாலை, பலத்த காற்று, இடியுடன் தொடங்கிய கனமழை, 3 மணி நேரம் கொட்டியது. அங்கு, சேலம், இடைப்பாடி, திருச்செங்கோடு பஸ் ஸ்டாப்புகளில் நிழற்குடை இல்லாததால், பஸ்சுக்கு காத்திருந்த பயணியர், மழையால் சிரமத்துக்கு ஆளாகினர்.

அதேபோல் இடைப்பாடி அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை

பெய்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us