Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/எஸ்.வி.எஸ்., நகை கடைகளில் சோதனை 35 பவுன், 50 கிலோ வெள்ளி பறிமுதல்

எஸ்.வி.எஸ்., நகை கடைகளில் சோதனை 35 பவுன், 50 கிலோ வெள்ளி பறிமுதல்

எஸ்.வி.எஸ்., நகை கடைகளில் சோதனை 35 பவுன், 50 கிலோ வெள்ளி பறிமுதல்

எஸ்.வி.எஸ்., நகை கடைகளில் சோதனை 35 பவுன், 50 கிலோ வெள்ளி பறிமுதல்

ADDED : ஜூன் 28, 2024 01:22 AM


Google News
சேலம், -

சேலம், வலசையூரை சேர்ந்தவர் சபரிசங்கர், 35. சேலம், தர்மபுரி, நாமக்கல், ஆத்துார், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில், எஸ்.வி.எஸ்., பெயரில் நகை கடை நடத்தினார். கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களிடம் முதலீடு பெற்று, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து, கடைகளை மூடிவிட்டு தப்பினார். தர்மபுரி போலீசார், புதுச்சேரியில் அவரை கைது

செய்தனர்.

அவரை, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்தில் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி மற்றும் ஆத்துார், தாரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மூடப்பட்ட நகை கடைகளை திறந்து நேற்று முன்தினம் சோதனை செய்தனர். சபரிசங்கரை அழைத்து வந்து கடைகளில் உள்ள பொருட்களை கணக்கெடுத்தனர்.

நேற்று அதிகாலை வரை தொடர்ந்த சோதனையில் கடைகளில் இருந்து, 35 பவுன் நகை, 50 கிலோ வெள்ளி கொலுசு, வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us