Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலையை கடக்க மாணவர்கள் சிரமம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் தேவை

சாலையை கடக்க மாணவர்கள் சிரமம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் தேவை

சாலையை கடக்க மாணவர்கள் சிரமம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் தேவை

சாலையை கடக்க மாணவர்கள் சிரமம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் தேவை

ADDED : ஜூன் 16, 2025 06:56 AM


Google News
பனமரத்துப்பட்டி: மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரிப்பள்ளி ஆகியவற்றில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்-கின்றனர். சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லுார் ஊருக்கு வெளியே செல்கிறது. தற்போது நெடுஞ்சாலையில் மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது.

இதனால் நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்-களில் இருந்து வரும் வாகனங்கள், மல்லுார் அரசு மேல்நிலைப்-பள்ளி வழியே சேலம் செல்கிறது. காலை, மாலையில், ஏராள-மான வாகனங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதிரிப்-பள்ளி வழியே செல்வதால், மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.குறிப்பாக காலையில் பள்ளி தொடங்கும்போதும், மாலையில் பள்ளி விடும் நேரத்தின்போதும், பள்ளி முன் போலீசார் பாது-காப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

மாணவ, மாணவியர் சாலையை கடக்கவும், சாலையோரம் நடந்து செல்லவும், வெண்ணந்துார் போலீசார் உதவி செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us