Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'இன்ஸ்டா'வில் காதலித்த மாணவி தொழிலாளியை கரம்பிடித்தார்

'இன்ஸ்டா'வில் காதலித்த மாணவி தொழிலாளியை கரம்பிடித்தார்

'இன்ஸ்டா'வில் காதலித்த மாணவி தொழிலாளியை கரம்பிடித்தார்

'இன்ஸ்டா'வில் காதலித்த மாணவி தொழிலாளியை கரம்பிடித்தார்

ADDED : செப் 25, 2025 02:32 AM


Google News
தாரமங்கலம் :தாரமங்கலம், சீரங்கனுாரை சேர்ந்த, செங்கல் சூளை தொழிலாளி கோவிந்தராஜ், 30. குப்பகவுண்டனுாரை சேர்ந்தவர் லோகேஸ்வரி, 20. மேச்சேரியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., 3ம் ஆண்டு படிக்கிறார். இருவரும், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர்.

நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், தொளசம்பட்டி முருகன் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து இருவரது பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். லோகேஸ்வரி பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் இருவரையும், கோவிந்தராஜ் பெற்றோருடன், போலீசார் அனுப்பிவைத்தனர்.

மற்றொரு ஜோடி

ஓமலுார், பாலிக்காட்டை சேர்ந்த, கட்டட ஒப்பந்ததாரர் மதியழகன், 30. சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் சமீம், 21. பி.எஸ்சி., முடித்தவர். இருவரும், 4 ஆண்டாக காதலித்த நிலையில், நேற்று வெள்ளாளப்பட்டியில் உள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று தஞ்சம் அடைந்தனர். பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தி அனுப்பிவைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us