Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எஸ்.எல்.வி., கிராண்ட் பேலஸ் திறப்பு

எஸ்.எல்.வி., கிராண்ட் பேலஸ் திறப்பு

எஸ்.எல்.வி., கிராண்ட் பேலஸ் திறப்பு

எஸ்.எல்.வி., கிராண்ட் பேலஸ் திறப்பு

ADDED : ஜூன் 09, 2025 03:47 AM


Google News
ஆத்துார்: ஆத்துார் அருகே ஈச்சம்பட்டியில், ஸ்ரீலட்சுமி வடிவேல் தோட்-டத்தில், 9 ஏக்கரில், எஸ்.எல்.வி., கிராண்ட் பேலஸ் திருமண மண்டப திறப்பு விழா நேற்று நடந்தது. எஸ்.ஆர்.எம்., பல்கலை இணை வேந்தர், ஐ.ஜே.கே., தலைவர் ரவி பச்சமுத்து திறந்து வைத்தார். இதில் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞரான, மண்டப நிர்வாகி வெங்கடேசன், நிர்வாக இயக்குனர்களான சுபத்ரா, டாக்டர் ரேவா, மகந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து வெங்கடேசன் கூறியதாவது:ஈச்சம்பட்டியில், சீலியம்பட்டி பிரிவு சாலை பஸ் ஸ்டாப்பில், 'ஏசி' வசதியுடன் கூடிய திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கார், பைக், வேன், பஸ் பார்க்கிங் வசதிகள், கணபதி கோவில் உள்ளன. திருமணம், காதணி விழா, வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு, பிறந்த நாள், வரவேற்பு, தொழில் சார்ந்த கூட்டம் நடத்-தலாம். 1,000 பேர் அமரும்படி, ரோமானிய கட்டடக்கலையில், 'ஏசி' அறை உள்ளது. 2,000 பேர் உணவு அருந்த, 'பப்ட் ஹால்' உள்ளது. 350 பேர் உணவு அருந்தும்படி, குளிரூட்டம் செய்த அறை உள்ளது. 22,000 சதுரடியில் புல் தரை உள்ளது. 3,000 பேருக்கு சமைக்க, அதிநவீன சமையற்கூடம், அசைவ உணவு தயாரிக்க, தனி சமையல் அறை உள்ளன. விளையாட்டு உபகர-ணங்களுடன் பொழுதுபோக்கு மையம், சுத்திகரிப்பு குடிநீர், மண்-டப விழாவை நேரலையில் காணும் வசதி, தடையில்லா மின்-சாரம், பொருட்களை பாதுகாக்க, 'சிசிடிவி' கேமரா வசதிகள் உள்-ளன. மண்டபத்தை, 99947 22777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us