Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 10ம் வகுப்பு தேர்வில் சரஸ்வதி பள்ளி சாதனை

10ம் வகுப்பு தேர்வில் சரஸ்வதி பள்ளி சாதனை

10ம் வகுப்பு தேர்வில் சரஸ்வதி பள்ளி சாதனை

10ம் வகுப்பு தேர்வில் சரஸ்வதி பள்ளி சாதனை

ADDED : மே 23, 2025 01:32 AM


Google News
ஆத்துார், ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தில் உள்ள, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தருண்பிரணவ், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு, 497 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம், மாநில அளவில், 3ம் இடம் பெற்றார்.

மாணவி ஸ்ரீவைஷ்ணவிதேவி, 496, கிருத்திகா, 494 மதிப்பெண்கள் பெற்று, 2, 3ம் இடங்களை பெற்றனர். சமூக அறிவியலில், 8 மாணவர்கள், அறிவியலில், 7 மாணவர்கள், கணிதத்தில் ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் பாலகுமார், செயலர் வரதராஜன், பொருளாளர் செல்வம், தாளாளர்கள் முகமது ஈசாக், கண்ணன், இயக்குனர்கள் மாணிக்கம், விஸ்வநாதன், வெங்கடேஷ், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us