Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலை சேதமாகி பெரும் பள்ளம் காவிரியில் நீராட செல்வோர் அச்சம்

சாலை சேதமாகி பெரும் பள்ளம் காவிரியில் நீராட செல்வோர் அச்சம்

சாலை சேதமாகி பெரும் பள்ளம் காவிரியில் நீராட செல்வோர் அச்சம்

சாலை சேதமாகி பெரும் பள்ளம் காவிரியில் நீராட செல்வோர் அச்சம்

ADDED : மே 24, 2025 01:30 AM


Google News
மேட்டூர், மேட்டூர் காவிரியாற்றில் நீராட, பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர், பக்தர்கள், படித்துறைக்கு கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். அவர்கள் வாகனங்களை, கரையோரம் நிறுத்திச்செல்வர். சில மாதங்களுக்கு முன், படித்துறை அருகே உள்ள தார்ச்சாலை அடிவாரம், மழைநீர் வடிகால் உடைந்து, சாலையின் ஒரு பகுதி சேதமாகி, அந்த இடத்தில் பள்ளமாக காணப்படுகிறது.

இருப்பினும் அந்த வழியே தொடர்ந்து பக்தர்கள், சுற்றுலா பயணியர் செல்லும் வாகனங்களின் அழுத்தத்தால், சாலை மேலும் இடிந்து, வாகனங்கள் ஆற்றில் விழும் அபாயம் நிலவுகிறது. தவிர அந்த இடத்தில் சுற்றுலா பயணியர், பக்தர்கள், அச்சத்துடன் செல்லும் அவலம் தொடர்கிறது.

அதனால் சேதமடைந்த மழைநீர் வடிகாலை கட்டி, இடிந்து விழுந்த சாலையை சீரமைக்க, மேட்டூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us