Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

ADDED : மே 10, 2025 01:40 AM


Google News
வாழப்பாடி, வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் பின்புறம், அயோத்தியாப்பட்டணம் - பேளூர் நெடுஞ்சாலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு, சந்திரப்பிள்ளைவலசு மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார், பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், 5:50க்கு மறியலை மக்கள் கைவிட்டனர்.

இதுகுறித்து மக்கள் கூறிய

தாவது: தான்தோன்றீஸ்வரர் கோவில் பகுதியில் இருந்து பேளூர் பஸ் ஸ்டாண்ட் வரை, நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி, 3 மாதங்களாக நடக்கிறது. இதனால் இரு மாதங்களுக்கு முன், மேட்டூர் பிரதான குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டு, தண்ணீர் இன்றி சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இனியாவது அதிகாரிகள்

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us