Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் மொபைல் திருடியவருக்கு காப்பு

ரயிலில் மொபைல் திருடியவருக்கு காப்பு

ரயிலில் மொபைல் திருடியவருக்கு காப்பு

ரயிலில் மொபைல் திருடியவருக்கு காப்பு

ADDED : செப் 01, 2025 04:11 AM


Google News
சேலம்: தர்மபுரி மாவட்டம் வெண்ணம்பட்டி, வேப்பமரத்துக்கொட்டாய், சக்தி நகரை சேர்ந்தவர் செந்தில்வேலன், 30. தனியார் நிறுவ-னத்தில் பணிபுரிகிறார். கடந்த ஜூலை, 10ல், தர்மபுரியில் இருந்து, பெங்களூரு பாசஞ்சர் ரயிலில் ஏறி துாங்கியபடி பய-ணித்தார்.

பாலக்கோடு - மாரண்டஹள்ளி ஸ்டேஷன்கள் இடையே சென்றபோது, மர்ம நபர், செந்தில்வேலன் சட்டை பாக்கெட்டில் இருந்த, மொபைல் போனை திருடிக்கொண்டார். சிறிது நேரத்துக்கு பின் விழித்தபோது, மொபைல் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜூலை, 22ல் அவர் புகார்படி, தர்ம-புரி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்னர். அதில் தர்ம-புரி மாவட்டம் நல்லம்பள்ளி, இந்திரா காலனியை சேர்ந்த அன்பு-மணி, 19, திருடியது தெரிந்தது. அவரை, நேற்று முன்தினம் கைது செய்த ரயில்வே போலீசார், மொபைல் போனை மீட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us