/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாற்றுத்திறனாளி பலாத்காரம்: தொழிலாளி சரண்மாற்றுத்திறனாளி பலாத்காரம்: தொழிலாளி சரண்
மாற்றுத்திறனாளி பலாத்காரம்: தொழிலாளி சரண்
மாற்றுத்திறனாளி பலாத்காரம்: தொழிலாளி சரண்
மாற்றுத்திறனாளி பலாத்காரம்: தொழிலாளி சரண்
ADDED : பிப் 24, 2024 03:15 AM
சேலம்: வாழப்பாடி அருகே அனுப்பூர், மேலக்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி நேரு, 50.
இவர் சில நாட்களுக்கு முன், வீட்டில் தனியே இருந்த, 19 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை, பலாத்காரம் செய்ததாக, அவரது பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேருவை தேடினர். இந்நிலையில் அவர், சேலம் கூடுதல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.