/உள்ளூர் செய்திகள்/சேலம்/குமரகிரி ஏரியில் பரிசல் சவாரி விரைவில் தொடங்கும்: மேயர்குமரகிரி ஏரியில் பரிசல் சவாரி விரைவில் தொடங்கும்: மேயர்
குமரகிரி ஏரியில் பரிசல் சவாரி விரைவில் தொடங்கும்: மேயர்
குமரகிரி ஏரியில் பரிசல் சவாரி விரைவில் தொடங்கும்: மேயர்
குமரகிரி ஏரியில் பரிசல் சவாரி விரைவில் தொடங்கும்: மேயர்
ADDED : ஜூலை 16, 2024 01:59 AM
சேலம்: ''குமரகிரி ஏரியில், விரைவில் பரிசல் சவாரி தொடங்கப்படும்,'' என, மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட குமரகிரி ஏரி புனரமைக்கப்-பட்டு, சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான பணி நடந்து வருகி-றது.
இவற்றை நேற்று, சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், மேயர் ராமச்சந்திரன் ஆகியோர், பரிசலில் சென்று ஆய்வு நடத்-தினர்.இதுகுறித்து மேயர் கூறியதாவது: குமரகிரி ஏரி, 40 ஏக்கர் பரப்ப-ளவு கொண்டது. 20 கோடி மதிப்பில் கரைகள் பலப்படுத்தப்-பட்டு, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை, ஏரியை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணி, சுற்றுச்சுவர், முன்புற கத-வுகள், ஏரியை சுற்றிலும் 'சிசிடிவி' கேமிராக்கள், கழிவு நீர் சுத்திக-ரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பரிசல் சவாரியும் தொடங்கப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு எம்.எல்.டி., தண்ணீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மண்திட்டு, சரணா-லயம் தொடங்குவதற்கு, மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு கூறினார்.கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன், உதவி கமிஷனர் வேடி-யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.