/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீட்டை சூறையாடிய 30 பேரில் ஒருவர் கைது வீட்டை சூறையாடிய 30 பேரில் ஒருவர் கைது
வீட்டை சூறையாடிய 30 பேரில் ஒருவர் கைது
வீட்டை சூறையாடிய 30 பேரில் ஒருவர் கைது
வீட்டை சூறையாடிய 30 பேரில் ஒருவர் கைது
ADDED : செப் 22, 2025 01:32 AM
தலைவாசல்:தலைவாசல், தென்குமரையை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 61, இவரது மனைவி புவனேஸ்வரி, 56. இவர்களை, அதே பகுதியைச் சேர்ந்த உஷா உள்பட, 30க்கும் மேற்பட்டோர், இடப்பிரச்னை தொடர்பாக தாக்கினர்.
தொடர்ந்து வீட்டை சூறையாடி, அங்கிருந்த கட்டில், சேர், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை, அருகே உள்ள மயானத்தில் வீசிச்சென்றனர். இதுகுறித்து, ராஜேந்திரன் புகார்படி, உஷா உள்பட, 30 பேர் மீது தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதில் நேற்று, பாலமுருகன், 51, என்பவரை கைது செய்து, மற்றவர்களை தேடுகின்றனர்.