ADDED : ஜூன் 20, 2024 07:27 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், ராமிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார், 37.
இவரது தந்தை கோபால், 63. இவர், நண்பர் சம்பத் ஆகியோர், கடந்த, 17 இரவு, 8:00 மணிக்கு, ஜலகண்டாபுரம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது கோபால் பின்புறம், 'ஸ்பிளண்டர் ப்ளஸ்' பைக் மோதியது. அதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபால் நேற்று முன்தினம் இறந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.