Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெண்ணிடம் அத்துமீறி வெட்டிய முதியவர் கைது

பெண்ணிடம் அத்துமீறி வெட்டிய முதியவர் கைது

பெண்ணிடம் அத்துமீறி வெட்டிய முதியவர் கைது

பெண்ணிடம் அத்துமீறி வெட்டிய முதியவர் கைது

ADDED : ஜூலை 05, 2024 01:05 AM


Google News
சேலம்: சேலம், மெய்யனுார், அர்த்தனாரி கவுண்டர் தெருவை சேர்ந்தவர், 37 வயது பெண்.

இவருடன், அதே பகுதியை சேர்ந்த வேலு, 52, என்பவரின் குடும்பத்தினர் பழகி வந்தனர். பின் வேலு, அப்-பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அப்பெண், வேலுவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.கடந்த மே, 29ல் இரும்பாலை, புது ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு அப்பெண் சென்றார். அங்கு வந்த வேலு, அப்பெண் சேலையை பிடித்து இழுத்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரம-டைந்த வேலு, கத்தியால் கை, தலை, முகத்தில் வெட்டிவிட்டு தப்பியுள்ளார். காயம் அடைந்த பெண், சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். இந்நி-லையில் அப்புகாரை வாபஸ் பெறுமாறு, வேலுவின் மனைவி அலமேலு, 50, அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இதையடுத்து வேலு, அலமேலு மீது சூரமங்கலம் மகளிர் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வேலுவை கைது செய்து அலமேலுவை தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us