Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/தேசிய தர நிர்ணய குழுவினர் அரசு மருத்துவமனையில் ஆய்வு

தேசிய தர நிர்ணய குழுவினர் அரசு மருத்துவமனையில் ஆய்வு

தேசிய தர நிர்ணய குழுவினர் அரசு மருத்துவமனையில் ஆய்வு

தேசிய தர நிர்ணய குழுவினர் அரசு மருத்துவமனையில் ஆய்வு

ADDED : ஜன 03, 2024 11:24 AM


Google News
மேட்டூர்: மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று தேசிய தர நிர்ணய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பிரசவ வார்டு, கண் சிகிச்சை பிரிவு என, 10க்கும் மேற்பட்ட வார்டுகளில், 350 படுக்கைகள் உள்ளன. தேசிய தர நிர்ணய குழு, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, துாய்மை, பணியாளர்கள் கவனிப்புக்கு உள்ளிட்ட ஒவ்வொரு பணிக்கும் மதிப்பெண் வழங்கும். அதன் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெறும் பட்சத்தில், மாநிலத்தில் சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு, கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கும்.

நடப்பாண்டு, தேசிய தர நிர்ணய குழு மாநில பொறுப்பு அலுவலர் மருத்துவர் அசோக் தலைமையிலான குழுவினர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் இரு நாள் ஆய்வை மேற்கொள்கின்றனர். முதல் நாள் ஆய்வு நேற்று காலை துவங்கியது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், அவர்களுக்கு குழுவினர் ஆலோசனை வழங்கினர். அதனை தொடர்ந்து வார்டுகள், வராண்டா, சுற்றுப்பகுதியிலும் ஆய்வு செய்தனர்.

மேட்டூர் மருத்துவமனை மருத்துவ அலுவலர் இளவரசி, உறைவிட மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us