/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தேவாலய பொன் விழாவில் அமைச்சர், ஆயர் பங்கேற்பு தேவாலய பொன் விழாவில் அமைச்சர், ஆயர் பங்கேற்பு
தேவாலய பொன் விழாவில் அமைச்சர், ஆயர் பங்கேற்பு
தேவாலய பொன் விழாவில் அமைச்சர், ஆயர் பங்கேற்பு
தேவாலய பொன் விழாவில் அமைச்சர், ஆயர் பங்கேற்பு
ADDED : ஜூன் 14, 2025 06:42 AM
சேலம்: சேலம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் தேவாலய பெருவிழா, பொன்விழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் ஆயர் சிங்கராயன் கொடியேற்றி, திரு-விழா, 50ம் ஆண்டின் பொன் விழாவை தொடங்கி வைத்தார். நேற்று பொன்விழா நிறைவு, திருவிழா சிறப்பு திருப்பலியை, சேலம் மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் நடத்-தினார். மாலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தேர் பவனியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமானோர், தேரை இழுத்து, அஸ்தம்பட்டி, காந்தி சாலை வழியே சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தனர். சேலம் மறைவட்ட முதன்மை குரு அழகு செல்வம், பொன்விழா குழுவினர் பங்கேற்-றனர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அந்தோணி மரிய ஜோசப், உதவி பங்கு தந்தை கிேஷார் குமார் யாக்கோபு செய்தி-ருந்தனர்.
சங்ககிரி ஆலயம்
சங்ககிரி புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா, கடந்த, 1ல் தொடங்கியது. தினமும் மாலை சிறப்பு சொற்பொழிவு, பிரார்த்தனை கூட்டம் நடந்தது. நேற்று இரவு குழந்தை இயேசு, அன்னை மரியாள், புனித சூசையப்பர் சிலைகளை, மின்விளக்-குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 3 தேர்களில் வைத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியே, ஏராளமானோர் இழுத்துச்சென்-றனர். தேர் பவனிக்கு முன்னதாக பலர், இயேசு கிறிஸ்து பாடல்-களை பாடியபடி, கைகளில் மெழுவர்த்தி ஏந்தி சென்றனர். வளா-கத்தில் தேர் பவனி நிறைவு பெற்றதும், அங்கு சிறப்பு பிரார்த்-தனை நடந்தது.