/உள்ளூர் செய்திகள்/சேலம்/சொக்கநாதர் கோவிலில் புனரமைப்பு பணி வரும் பிப்ரவரியில் தொடங்க முடிவுசொக்கநாதர் கோவிலில் புனரமைப்பு பணி வரும் பிப்ரவரியில் தொடங்க முடிவு
சொக்கநாதர் கோவிலில் புனரமைப்பு பணி வரும் பிப்ரவரியில் தொடங்க முடிவு
சொக்கநாதர் கோவிலில் புனரமைப்பு பணி வரும் பிப்ரவரியில் தொடங்க முடிவு
சொக்கநாதர் கோவிலில் புனரமைப்பு பணி வரும் பிப்ரவரியில் தொடங்க முடிவு
ADDED : ஜன 28, 2024 10:11 AM
மேட்டூர்: சொக்கநாதர் கோவிலில் புனரமைப்பு பணியை, வரும் பிப்ரவரியில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே மீனாட்சி சொக்கநாதன், ஞான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அக்கோவில் கட்டி, 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
இதனால் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், கோவிலை புனரமைக்க தற்போதைய கட்டுமான விலை நிலவரப்படி, 1.65 கோடி ரூபாய் செலவாகும் என, திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பினர். இதை ஆய்வு செய்த அரசு, 2023 - 24ல் பொது நல நிதி திட்டத்தில், 1.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இதையடுத்து புனரமைப்பு பணியை தொடங்குவது குறித்து ஆய்வு கூட்டம், கோவில் வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.
அதில் வரும் பிப்ரவரியில் புனரமைப்பு பணியை தொடங்கவும், அடுத்த கட்டமாக கோபுரம் கட்டும் பணியை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் விநாயகர், காலபைரவர், நவக்கிரக சன்னதிகள், நன்கொடைதாரர்கள் உதவியுடன் கட்டப்படும்.
அதற்கு நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
இதில் அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, எம்.எல்.ஏ., சதாசிவம், செயல் அலுவலர் சக்கரவர்த்தி, மேட்டூர் திருமுருக பக்த பேரவை அமைப்பினர், சிவனடியார் திருத்தொண்டர்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.