Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இரவில் 2 பேரிடம் வழிப்பறி 6 பேர் கும்பலுக்கு வலை

இரவில் 2 பேரிடம் வழிப்பறி 6 பேர் கும்பலுக்கு வலை

இரவில் 2 பேரிடம் வழிப்பறி 6 பேர் கும்பலுக்கு வலை

இரவில் 2 பேரிடம் வழிப்பறி 6 பேர் கும்பலுக்கு வலை

ADDED : அக் 21, 2025 01:30 AM


Google News
சேலம், சேலம் கருங்கல்பட்டி, பாண்டுரங்கா விட்டல் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன், 38, ஓட்டல் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வீட்டருகே சென்ற போது, 6 பேர் கும்பல் வழிமறித்து, கத்தியை காட்டி அவரிடமிருந்து, 12 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்து தப்பினர்.

அதே கும்பல், குகை, இட்டேரி ரோட்டை சேர்ந்த வீரமணி, 43, என்பவரை மிரட்டி, 2,500 ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர். இருபுகார் தொடர்பாக, அன்னதானப்பட்டி போலீசார் வழக்குபதிந்து, 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us