Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/டீ மாஸ்டரை கொல்ல முயன்ற நண்பர்கள் கைது

டீ மாஸ்டரை கொல்ல முயன்ற நண்பர்கள் கைது

டீ மாஸ்டரை கொல்ல முயன்ற நண்பர்கள் கைது

டீ மாஸ்டரை கொல்ல முயன்ற நண்பர்கள் கைது

ADDED : மார் 24, 2025 07:00 AM


Google News
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், கணேசபுரத்தை சேர்ந்த டீ மாஸ்டர் செம்மலை, 29. இவரது நண்பர்கள், ஏத்தாப்பூரை சேர்ந்த செல்வராஜ், 29, விஜயகுமார், 43, புத்திரகவுண்டன்பாளையம் கார்த்திக், 32. இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, ஏத்தாப்பூர் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் செம்மலையை, 3 பேரும் சேர்ந்து தாக்கினர். தொடர்ந்து, 'ஹாலோ பிரிக்ஸ்' கல்லை எடுத்து தலையில் போட்டனர். படுகாயம் அடைந்த செம்மலையை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, செல்வராஜ், விஜயகுமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us