Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி

ADDED : ஜூலை 02, 2024 07:23 AM


Google News
சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விஷம் குடித்து மயங்கிய விவசாயி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை ஏரிக்கரை அம்-மன்கோவில் தெருவை சேர்ந்த விவசாயி ராம-மூர்த்தி, 42. நேற்று இவர், கலெக்டர் அலுவல-கத்தில் மனு அளிக்க வந்தபோது, மயங்கி விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி, அரை மயக்கத்தில் கிடந்த அவரிடம் போலீசார் நடத்-திய விசாரணையில், விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து, 108 அவசரகால ஆம்புலன்ஸ் உதவியுடன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கையில் வைத்திருந்த மனுவில் கூறியிருந்-ததாவது: மனைவி சுமதியுடன் கருத்து வேறுபாடு உண்டாகி தனியாக வசிக்கிறேன். கடந்த, 5ல், விவசாய வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி-யபோது, பூட்டு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இதுபற்றி மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, புகாரை விசாரித்து நியாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us