ADDED : செப் 07, 2025 01:27 AM
தாரமங்கலம் :தாரமங்கலம், மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ், 19. துட்டம்பட்டியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பணிபுரிகிறார்.
கடந்த ஆக., 28 முதல், ஆகாைஷ காணவில்லை. உறவினர், நண்பர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை பாபு புகார்படி, தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து தேடுகின்றனர்.