Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போதையில் தொழிலாளி கீழே விழுந்து பலி

போதையில் தொழிலாளி கீழே விழுந்து பலி

போதையில் தொழிலாளி கீழே விழுந்து பலி

போதையில் தொழிலாளி கீழே விழுந்து பலி

ADDED : ஜூன் 17, 2025 01:25 AM


Google News
ஓமலுார், அதிக போதை காரணமாக, கீழே விழுந்து கட்டட தொழிலாளி இறந்தார்.

ஓமலுார் அருகே காமலாபுரம் கிழக்கத்திகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன், 32, கட்டட தொழிலாளி. திருமணமாகவில்லை. குடி பழக்கம் கொண்ட இவர் நேற்று மதியம், தன் வீட்டின் அருகே பஸ்ஸில் வந்து இறங்கியுள்ளார். அப்போது தள்ளாடி கீழே விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரை துாக்கி உட்காரவைத்து தண்ணீர் கொடுத்துள்ளனர். பின் நடக்க முடியாமல் தரையில் படுத்தபடி இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவரால் எழ முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவனைக்கு கொண்ட சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us