ADDED : ஜூன் 10, 2025 01:08 AM
சேலம்,சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்துக்கு, நாளை (11ல்,) வருகை தரும் முதல்வர், மறுநாள், 12, காலையில், காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் நடைபெறும், அரசு விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.அதையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்.