Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலையில் கிடந்த ரூ.20,900 போலீசில் ஒப்படைத்த டிரைவர்

சாலையில் கிடந்த ரூ.20,900 போலீசில் ஒப்படைத்த டிரைவர்

சாலையில் கிடந்த ரூ.20,900 போலீசில் ஒப்படைத்த டிரைவர்

சாலையில் கிடந்த ரூ.20,900 போலீசில் ஒப்படைத்த டிரைவர்

ADDED : செப் 13, 2025 01:10 AM


Google News
இடைப்பாடி, இடைப்பாடி, கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜன், 56. இடைப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக உள்ளார். நேற்று மாலை, குழந்தைகளை இறக்கி விட்டு வேனை ஓட்டியபடி வந்துகொண்டிருந்தார்.

மொரசப்பட்டி போஸ்ட் ஆபீஸ் அருகே வந்தபோது, சாலையில் பணம் கிடந்ததை பார்த்தார். உடனே வாகனத்தை நிறுத்திப்போய் பார்த்தபோது, 20,900 ரூபாய் இருந்தது. உடனே அவர், பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வந்து, பணத்தை ஒப்படைத்தார்.

விசாரணையில் அந்த பணம், மொரசப்பட்டியை சேர்ந்த மணிகண்டனுடையது என தெரியவந்தது. பின் டிரைவரே, போலீஸ் முன்னிலையில், உரியவரிடம் ஒப்படைத்தார். டிரைவரை, போலீசார்

பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us