/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆசிரியையை தாக்கிய தி.மு.க., பிரமுகர் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவுஆசிரியையை தாக்கிய தி.மு.க., பிரமுகர் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு
ஆசிரியையை தாக்கிய தி.மு.க., பிரமுகர் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு
ஆசிரியையை தாக்கிய தி.மு.க., பிரமுகர் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு
ஆசிரியையை தாக்கிய தி.மு.க., பிரமுகர் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு
ADDED : ஜன 03, 2024 10:24 PM
வீரபாண்டி:சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த தேவகுமார் மனைவி உமா, 42. சித்தர்கோவில் அருகே லகூவம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை. அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகியான தம்பிதுரை, 52, என்பவரின் 7 வயது மகள், உமா ஆசிரியையாக உள்ள வகுப்பில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.
சம்பவத்தன்று, தம்பிதுரை மது போதையில் வகுப்பறைக்கு சென்று உமாவிடம் மகள் படிப்பு குறித்து வாக்குவாதம் செய்தார். பின், உமா, மற்றொரு ஆசிரியரிடம் பேசி கொண்டிருந்ததை தன் மொபைல் போனில் படம் எடுத்தார்.
இதை, உமா தட்டிக்கேட்டு தம்பிதுரையை, அவரும் தன் மொபைல் போனில் படம் எடுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. போதையில் இருந்த தம்பிதுரை விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில் தம்பிதுரை சேர்க்கப்பட்டார். ஆசிரியை உமா புகார் கொடுத்த புகார்படி இரும்பாலை போலீசார், தம்பிதுரை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் தம்பிதுரை அளித்த புகார்படி, ஆசிரியை உமா மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசுப் பள்ளியில் தி.மு.க., பிரமுகர் மற்றும் ஆசிரியை எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.