Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தி.மு.க., 'பார்முலா' சேலத்தில் எடுபடாது அ.தி.மு.க., புறநகர் மாவட்ட செயலர் 'பளிச்'

தி.மு.க., 'பார்முலா' சேலத்தில் எடுபடாது அ.தி.மு.க., புறநகர் மாவட்ட செயலர் 'பளிச்'

தி.மு.க., 'பார்முலா' சேலத்தில் எடுபடாது அ.தி.மு.க., புறநகர் மாவட்ட செயலர் 'பளிச்'

தி.மு.க., 'பார்முலா' சேலத்தில் எடுபடாது அ.தி.மு.க., புறநகர் மாவட்ட செயலர் 'பளிச்'

ADDED : ஜூன் 16, 2025 06:53 AM


Google News
ஆத்துார்: ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் வரும், 21ல் கருமந்துறையில், அ.தி.மு.க., சார்பில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, ஆத்துாரில் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதற்கு தலைமை வகித்து, சேலம் புறநகர்

மாவட்ட செயலர் இளங்-கோவன் பேசியதாவது:அ.தி.மு.க., - பா.ஜ., வலுவான கூட்டணியால், தி.மு.க.,வுக்கு பயம் வந்துவிட்டது. 2011 போன்று, 2026ல், தி.மு.க., எதிர்க்கட்-சியாக கூட இல்லாத நிலை உருவாகும். சேலத்துக்கு நேரு, வேலு யார் வந்தாலும், அ.தி.மு.க.,வை எதிர்த்து வெற்றி பெறமு-டியாது. சேலத்தில், 15 ஆண்டாக, தி.மு.க., வெற்றி பெற முடிய-வில்லை என, தற்போது, தி.மு.க., பொறுப்பாளராக வந்துள்ள அமைச்சர் வேலுவும், கட்சியினரிடம் புலம்பியுள்ளார்.

பென்னாகரம், திருமங்கலம் என, தி.மு.க.,வின் எந்த, 'பார்மு-லா'வும் சேலத்தில் எடுபடாது. அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., 'பார்முலா' தான் வெற்றி பெறும். கல்வராயன்ம-லையில் அதிகளவில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன.

பட்டா, கறவை மாடு வாங்கி தருவதாக, மோசடி செய்த ஆளுங்-கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 21ல், கருமந்துறையில் கண்-டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், ஏற்காடு சித்ரா, கெங்கவல்லி நல்லதம்பி, ஒன்றிய, கிளை செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us